Monday, November 28, 2011

எழுந்து வா தோழா !!

முதல் காதலை காவியமாய் சுவாசித்த ஒவ்வொரு இதையமும்
ஒரு கனத்தில் பழுதடையும் , தலைவியின் பிரிவில் ...
நும் காவியம் கதையல்ல ,கவிதையின் களஞ்சியம்.
எழுந்து வா தோழா !
மாற்றி எழுதும் வேட்கை மறுபடி பிறக்க வேண்டும் !!!

Monday, November 21, 2011

ஊடல் !!

வெற்று உடம்பு
காத்திருக்கும் உணர்வுகள்
விரும்பிய இதயம் வியர்வையின் ஸ்பரிசத்தில்
உறவாடிய வேட்கை
என் நீண்ட நாள் உண்ணாவிரதம்
முடிவை எட்டியது மஞ்சத்தில் !!!

Saturday, November 19, 2011

நீ !!

விழுந்த கனத்தில்
விதையாகிபூக்கும்
வித்தை கற்ற விதை நீ !!!

Friday, November 11, 2011

நான் நானில்லை !

நான் கவிஞன் அல்ல
கவிதையை காவியம் ஆக்குபவன் அல்ல
அவள் உரையாடலை ரசிப்பவன் அல்ல
துரத்தும் நினைவுகளை எட்டிப்பிடிப்பவன் அல்ல
ஈன்ற வலியை சட்டென்று உதறித் தள்ளுபவன் அல்ல
எப்பொழுது என் காதல் உயிர் இழந்ததோ
அப்போதிருந்து --
என் ஜீவன் வாழ்வதும் அல்ல சாவதும் அல்ல ..

mudal kavidai pathaam vagupil

Pennin naanam unakule
aanin aasai enakule
kaantha paarvai unakule
adai adaiyum veriyo enakule
kaniye kaadal pookum namakule!!!

காதலை செதுக்கிய காலத்தில் !!

இமைகளில் பதியும் எல்லா பூக்களும் இதையத்தில் நுழைவதில்லை ...மீறி நுழைந்த பூ என்றும் வாடுவதில்லை

இதயங்கள் புணர்வது புனிதமானது ... புணர்ந்த இதயம் புன்னகைப்பது பரவசத்தின் பெருக்கு .. !!!!!!!!!!!

சின்னதாய் சில கிறுக்கல்ஸ் !!

பௌர்ணமி வெளிச்சம் .. கருநிற இரவு மறையும் நேரம் .. மௌனம் தழுவிய என் முகம் ...எங்கோ ஏகாந்தத்தில் இருவரும் புனகைத்த பிம்பம் ...நிலவைப் பார்த்து கண்ணீரை கசிந்தேன் மனக்கசப்பில் ......சட்டென்று மழை ....அது மழை அல்ல அவளின் கண்ணீர் துளி ....

"ஒரு கணம் உன் வாழ்வில் உன் தேவதை உன் மனதை வதை புரிய செய்வாள் ...அவள் ஸ்பரிசங்கள் சலனமாகும் .....சிதைத்து விடு சிந்திய கண்ணீரை ... காணல் நீராய் கரையட்டும் காற்றிலே ...."

விரக்தியில் விழிகள் விரிய மறுக்கின்றன விடியும் வேலையில் ....... அதே விரக்திதான் என் விழியை மூட தடை செய்கிறது இரவு வேலையில் ......தூக்கம் தொலைவில் ......

பின்னிப் பிணைந்த ஒரு காவியம் பெண்மை ..இரு துருவம் சேர்ந்த ஒரு காவியம் காதல் ..காதல் உரசல் அல்ல உரசல் தான் காதல் ..உரசல் நட்பும் அல்ல ...உரசலை மறந்து அன்பை கொணர்வது நட்பு. உரசலை தேடாதே நட்பு மறைந்துவிடும் நட்பை தேடு .....

என் உணர்வை தழுவிய பிம்பங்கள் மறையும் காலம் தூரமில்லை .......என்னுள் உறைவது நான் மட்டும் தான் ...மகிழ்ச்சி எமக்கு !!